அச்சம்,நாணம்,மடம்,பயிர்ப்பு எல்லாம் ஒருசேர நகர்ந்துகொண்டிருக்க
நானும் அதனோடு சேர்ந்து நகர்ந்தேன்
அவளின் கண்கள் பயணிக்கவில்லை
ஆனால்
என் கண்கள் பயணிக்கத் தொடங்கின - என்னவனைத் தேடியா ?
அவளின் இதழ்கள் மலரவில்லை
ஆனால்
என் இதழ்கள் மலர்ந்துவிட்டன - என்னவனைக் கண்ட பின்பா ?
அவளின் இதழ்கள் சிவக்கவில்லை
ஆனால்
என் இதழ்கள் சிவந்துவிட்டன - என்னவனுடன் இதழ் சுவைக்கவா ?
அவளின் ஆத்மா அசையவில்லை
ஆனால்
என் ஆத்மாவில் அசைவில்லை - என்னவனுடன் ஊடல் கொள்ளவா ?
அவளின் காதலுக்காகவா
இல்லை
அவனின் காதலுக்காக - தந்தேன் என்னையே
அப்பொழுதுக்கூடத் தாங்கினான் என்னை அவன் கைகளில்
அவனுக்காகவே அக்கணமே என் உயிரை விடுவேன்
எந்தன் ஸ்பரிசம் தொடும் முன்னர் என்னவன் கைகளில் .............
0 comments: