உன் சமையலறையில்



வெந்தயமோ வெட்கப்பட்டு நின்றது
கடலை பருப்புக்கூட கண்ணை உருட்டி உருட்டிப் பார்த்தது
ஏலக்காய் ஏக்கமாகப் பார்த்தது
புளி பல்லைக் காட்டிக் கொண்டிருந்தது
பாசிபருப்பு பாசாங்குக் காட்டியது
உளுந்தம் பருப்பு உற்சாகமாய் உருண்டுக் கொண்டிருக்கிறது
மிளகாயோ மின்னியது
சுண்டக்கடலையோ சுண்டு விரல் போல் நின்றது
மல்லியோ மந்தாரமாய் இருந்தது
துவரம் பருப்போ துள்ளிக் கொண்டிருந்தது
வத்தல் கால்மேல் கால்போட்டு ஒய்யாரமாய் உட்கார்ந்திருந்தது
உப்பும் சர்க்கரையும் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது
ஏனென்றால்
அந்த கருநிற மைகளுக்கிடையில்
ஒளிந்திருக்கும் கண்களில் ஓரப்பார்வையால்
நீ சமையலறையில் நுழைந்த நொடி அது
என்னவளே நீ தீண்டப் போகும் அந்த முதற் ஸ்பரிசத்திற்காக
காத்திருக்கின்றன இத்தனையும்......

0 comments: