ரோஜாவின் சிரிப்பு


ஒரு துளி பயமில்லை
ஒரு துளி கண்ணீரில்லை
பறிக்கப் போகிறாய் என் உயிரை
நீயெனத் தெரிந்தும் இதழ் மலர்ந்தேன்
உன்னைக் கண்டு நீ வரும் அந்நேரம்,
என்னை பறித்த அந்நொடி நிகழ்ந்த  
உந்தன் இதழ் மலர்தலைக் கண்டேன்
கண்ணே என் கண்களினாலே மடியும் அத்தருவாயிலே,
என்னவளே இவையெல்லாம் உனக்காகத்தானடி

0 comments: