மேகத்தின் காதல்


நான் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த் துளிகளையும் .
எதிர்பார்த்து அதை ரசிக்கிறாய் நீ.கவலைப்படாதே
பெண்ணே இனிவரும் ஜென்மங்கள் அனைத்திலும்
அந்த கண்ணீர் சிந்தும் மேகமாய் மட்டும்தான்
பிறப்பேன் அதுவும் உனக்காக
எனது பல துளி கண்ணீரில் உந்தன் ஒரு துளி இதழ் மலர்தல்
நடக்குமே அதைக் கண்டவாறே இப்புவியில் விழுந்து
என்னுயிர் மாய்த்து உன் காலடியில் சேர்வேன் ........

0 comments: