காலணி



அழகே என்னுடன் வந்துவிடு என்றாய் மறுக்காமல் வந்தேன் உன்னுடன்,
அடுத்தகணமே நான் சுத்தம் நீ அசுத்தம் என்றாய்,கண்ணீருடன்
ஆனந்தமாய் ஆர்ப்பரித்தேன் உன்னைக் கண்டு உன் அடிவாரத்திலிருந்து
வேண்டாம் என்று ஒருநாள் என்னை வீசி எறிந்தாய் ஏனென்றால்
நான் உன் காலை கடித்தேன் என்று பரவாயில்லை,யோசிக்கவில்லை
நீ நில் என்றால் நின்றவன் நான்
நீ நட என்றால் நடந்தவன் நான்
உன்னை 24 மணிநேரமும் தாங்கியவன் நான் என்று,
என்னை விட சிறந்ததை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்று
நினைத்து நீ சிரித்த அந்தப் புன்னகையிலே வீழ்ந்தேன்
கண்ணே நான் அந்த குப்பைத்தொட்டியில்......

0 comments: