அணிகலன்



காலையில் எழுந்தவுடன் நீ
உணரும் அந்த முதல் சப்தத்தை
உந்தன் கால் ஓரக் கொலுசில் தொங்கிக் கொண்டு
இனிய ஓசையாய் வெளிபடுத்தும் அந்த ஜதியும்

வகிரெடுத்த வாரிய உன் பின் தலைமயிற்றோடு
எண்ணையால் பிணைந்துள்ள அந்த ஜடைமாட்டியும்

உனது தோடு விளிம்பில் ஜிமிக்கியில் சின்னதாய்
கடுகுக்கு போட்டியாய் ஒளிந்திருக்கும் அந்த மணியும் கூட
   
உன்னைக் காண்பதற்காக தானடி தனது
ஒவ்வொரு பிறவியும் முடித்துக் கொண்டு

கடைசி பிறவியாய் உன் விழியில் விழ வேண்டி
விழி தேட இடத்தில் விதியால் வித்திட்டு
உன்னோடு ஒன்றாக அணிகலனானது
அந்த ஓர் ஆத்மா

0 comments: