நிலவின் காதல்


மார்கழித்திங்கள் நடுங்கும் குளிரில் நடுநிசியில் இருந்து
அந்தரத்தில் கொசுக்கடியிலே தொங்கிக்கொண்டு இருக்கிறேன்
அள்ளி முனைந்த கூந்தலோடு,அள்ளி சொருகிய தாவணியில்
அழகாய் திருட்டுத்தனமாக  ஓரக் கண்களால் பார்த்துக்கொண்டு
அவசர அவசரமாய் குனிந்து இரு விரலால் நீ இடும் அந்த ஒற்றை
அரிசி மாவுக்கோலத்தை பார்க்க அந்த எறும்பின் பின்னே ஒளிந்து
ஆவலோடு காத்திருக்கிறேன் கண்ணே வேகமாய் வாராயோ.........

0 comments: