ஒத்த மல்லிகைப் பூ



உன்னைக் காண வேண்டுமென
உன் கூந்தலில் இருந்து சரிந்து விழுந்தேன்
கன்னம் முழுக்கக் குழி விழுந்து சிரித்து சிவந்து போகும் அந்த சிரிப்பழகு
யாரையோத் தேடும் உன் கண்களின் அந்த ஓர் நிமிட திருட்டுப் பார்வை
உன்னுடன் பிறந்ததிலிருந்தே ஒட்டியுள்ள அந்த பெண்மையின் அழகு
இவையெல்லாம் கண்ட அந்த ஒரு நொடியில் நான்
உன்னைக் கடந்து மலர்ந்து கீழே விழ வேண்டும்
பெண்ணே அதுவும் ஒரு வாசமுள்ள மலராய்

1 கருத்து:

  1. இவையெல்லாம் கண்ட அந்த ஒரு நொடியில் நான்
    உன்னைக் கடந்து மலர்ந்து கீழே விழ வேண்டும்
    பெண்ணே அதுவும் ஒரு வாசமுள்ள மலராய்......
    These lines are extra-ordinary.....Semmah...

    பதிலளிநீக்கு