காபிக்கொட்டையின் காதல்ச்சுவை




கண்விழித்த அந்த நொடியே உன்னைக் கண்டு
என்விழி மறந்து உன்விழியால் காதலில் விழுந்தேன்
நீ அழைத்தவுடன் ஏன் என்றுக்கூட கேளாமல்
விழுந்து உயிர்த்துறந்தேன் அந்த அரைக்கும் எந்திரத்தில்...
உனக்காக உயிர்த்தெழுந்தேன் காபித்தூளாய் சில மணித்துளிகளிலே
உனது முதற்ஸ்பரிசம் தீண்டி உன்கைகளில் தஞ்சம் அடைந்தேன்  
மீண்டும் என்மேல் சுடச்சுட பாலை ஊற்றப்பார்க்கிறாய் நீ,
தயங்காமல் ஊற்றடி அதை என்மேல் மீண்டும் வருவேன் அதையும் வென்று
இதோ அந்தச் சூட்டையும் தகர்த்தெறிந்து வந்துவிட்டேன்
உன்னை மகிழ்விக்க காபியாய்....
என்னவளே பருகிவிடு என்னை இக்கணமே ...  

உந்தன் மகிழ்ச்சி இதுதான் என்றால் எந்தன் ஜென்மங்கள்
இருக்கும் வரை நான் ஈடேற்றுவேன் என்னையே தியாகமாக தந்து
மகிழ்ச்சியில் நீ திளைக்கும் அந்த ஒரு சொட்டு காபிக்காக....
நான் தினமும் தியாகத்தில் திளைத்திருப்பேன் அதுவும் உனக்காக ......

0 comments: