ஜடைமாட்டி

                                       

சொலச் சொலவென தேங்காய் எண்ணெயை ஊற்றி
நீ பின்னிய அந்த ஒற்றைச் ஜடை பின்னலில்
பின்னி விழுந்தது உன் கூந்தல் மட்டுமல்ல...

இதை பார்த்துக் கொண்டிருந்த எண் கண்களும் தானடி
இது போதாதென்று நீ மாட்டிய அந்த ஜடைமாட்டியில்
மாட்டியது உன் கூந்தல் மட்டுமல்ல ...

என் இரு இமைகள் சந்திக்கும் அந்த கண்விழிகளும் தானடி
தயவு செய்து அவிழ்த்து விடு அந்த ஜடைமாட்டியை
மட்டுமல்ல என் கண்களையும் தான் கூறுகிறேன்...

0 comments: